மணிப்பூரில் குண்டு வெடிப்பு: 4 பேர் காயம்

மணிப்பூர் மாநிலம், கிழக்கு இம்பால் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை குண்டு வெடித்தது. இதில், 4 பேர் காயமடைந்தனர்.

மணிப்பூர் மாநிலம், கிழக்கு இம்பால் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை குண்டு வெடித்தது. இதில், 4 பேர் காயமடைந்தனர்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் தங்குமிடத்துக்கு அருகே இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில், காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com