பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதைக் கவனத்தில் கொண்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு, சம்பா மாவட்டங்களில் எல்லையோரக் கிராமங்களில் வசித்து வந்த 727 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் சர்வதேச எல்லைப் பகுதியில் இருக்கும் இந்தியக் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து, எல்லையோரப் பகுதிகளில் வசித்து வந்த 727 பேர் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை ஜம்மு-காஷ்மீர் மாநில காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.