பெண் பாடகர் பாலியல் பலாத்காரம்: போஜ்புரி திரைப்பட நடிகர் மனோஜ் பாண்டே கைது

பெண் பாடகரை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில், போஜ்புரி மொழி திரைப்பட நடிகர் மனோஜ் பாண்டே வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
பெண் பாடகர் பாலியல் பலாத்காரம்: போஜ்புரி திரைப்பட நடிகர் மனோஜ் பாண்டே கைது

பெண் பாடகரை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில், போஜ்புரி மொழி திரைப்பட நடிகர் மனோஜ் பாண்டே வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

போஜ்புரி திரைப்பட நடிகரான மனோஜ் பாண்டே, விருந்து நிகழ்ச்சி ஒன்றில் அந்தப் பெண் பாடகியை முதன்முதலில் பார்த்துள்ளார். பிறகு, அவருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதை நம்பி அந்தப் பெண், மனோஜ் பாண்டேவுடன் பழக ஆரம்பித்தார். பிறகு இருவரும் ஓரே வீட்டில் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்துள்ளனர்.

அக்காலகட்டத்தில் அந்தப் பாடகி கர்ப்பமுற்றார். இதை ஏற்காத மனோஜ் பாண்டே, அந்த கருவைக் கலைக்கும்படி வலியுறுத்தியுள்ளார். இதையேற்று, பாடகியும் தனது கருவைக் கலைத்துள்ளார்.

இந்நிலையில் ஏற்கெனவே அளித்த வாக்குறுதிப்படி, மனோஜ் பாண்டே அந்த பாடகியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாடகி, சார்கோப் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மனோஜ் பாண்டேவுக்கு எதிராக பாலியல் பலாத்காரம், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்களின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், தாணே மாவட்டம், கல்யாணில் நடைபெற்ற திரைப்படப்பிடிப்பு தளத்துக்கு சென்று மனோஜ் பாண்டேவை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com