நாடு முழுவதும் ஒரே சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, நுகர்பொருள் மீதான விலைப்பட்டியலை அதற்கு தக்க வகையில் மாற்றம் செய்து விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டது.
இதன் அடிப்படையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஜூலை 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரையில் விலைப்பட்டியலில் திருத்தம் செய்து வெளியிட காலக்கெடு வழங்கப்பட்டது.
இந்நிலையில், செப்டம்பர் 30-ந் தேதி (இன்றுடன்) இந்தக் காலக்கெடு முடிவடைகிறது. ஆனால், பெரும்பாலான நுகர்பொருள்களில் இந்த திருத்த விலைப்பட்டியல் இடம்பெறவில்லை. மேலும், வருகிற ஜூலை 1, 2018-ல் இதன் அடிப்படையிலான பட்ஜெட் அறிவிக்கப்படவுள்ளது.
எனவே, ஜிஎஸ்டி திருத்த விலைப்பட்டியலுடன் நுகர்பொருட்களை வெளியிட அந்தந்த நிறுவனங்கள் கால அவகாசம் கோரியது.
எனவே, இந்த திருத்த விலைப்பட்டியலுக்கான காலக்கெடு வருகிற டிசம்பர் 31,2017 வரை அதாவது இந்த வருட இறுதிவரை நீட்டித்து மத்திய உணவு, நுகர்பொருள் விவகாரம் மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் சனிக்கிழமை உத்தரவிட்டார்.