ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
ஜம்மு மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக காவல்துறையினர் ஏற்கனவே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர். 8 பேரில் ஒருவர் சிறார் என்பதால், அவருக்கு தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, குற்றப்பத்திரிகை நகலை குற்றஞ்சட்டப்பட்ட 8 பேருக்கும் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வரும் 28ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.