பதான்கோட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவல்?

பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பு நடவடிக்கை திங்கள்கிழமை பலப்படுத்தப்பட்டது.

பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பு நடவடிக்கை திங்கள்கிழமை பலப்படுத்தப்பட்டது.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், ''கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமான இரண்டு நபர்கள் உதவி கேட்டு தமது இரு சக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டதாகவும், ஜம்மு காஷ்மீரை ஒட்டிய கதுவா பகுதியில் அவர்கள் இறங்கி கொண்டதாகவும் இங்குள்ள நபர் ஒருவர் தகவல் அளித்தார்'' என்று தெரிவித்தனர்.
மேற்கண்ட தகவலின் அடிப்படையில் பதான்கோட்டில் பாதுகாப்பு நடவடிக்கை திங்கள்கிழமை பலப்படுத்தப்பட்டது. முக்கிய இடங்களில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் குருதாஸ்பூர் மற்றும் பதான்கோட் மாவட்டங்களில் குண்டு துளைக்காத 9 லாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தினாநகரில் கடந்த 2015-ஆம் ஆண்டிலும், பதான்கோட்டில் உள்ள விமானப்படைத்தளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com