ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காணாமல் போன ராணுவ வீரர் ஒருவர் தற்போது பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளார்.
இத்ரீஸ் மிர் என்ற அந்த நபர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதால் அதிருப்தி அடைந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த மாத தொடக்கம் முதல் இத்ரீஸ் மிர்ரை காணவில்லை. தற்போது அவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தில் இணைந்துள்ளதாகவும், அவருடன் மேலும் இரண்டு நபர்கள் அந்த இயக்கத்தில் சேர்ந்துள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே வேளையில், பயங்கரவாத அமைப்பில் இத்ரீஸ் மீர் இணைந்தது குறித்த தகவலை ராணுவம் உறுதி செய்யவில்லை.