முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி அனைத்து நீதிமன்றங்களுக்கும் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் உடல் நலக்குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை காலமானார். இவரது மறைவுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி அனைத்து நீதிமன்றங்களுக்கும் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணி முதல் நீதிமன்றங்கள் இயங்காது என உச்ச நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.