புது தில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அக விலைப்படி உயர்த்தப்படுவதாக தற்பொழுது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தில்லியில் புதனன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பு பின்வருமாறு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அக விலைப்படி உயர்த்தப்படுகிறது.
இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்பட உள்ளது.
இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் வரும் மாத ஊதியம் பெறும் பொழுது அவர்களுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரு மாதங்களுக்குமான உயர்த்தப்பட்ட அகவிலைப்படி சேர்த்து வழங்கபப்டும்.
இதன் காரணமாக 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62.03 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள்.
இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக, இந்த இரு மாதங்களுக்காக மத்திய அரசுக்கு ரூ 4024 கோடியும், வருடத்திற்கு ரூ 6112 கோடியும் செலவாகும் என்று தெரிகிறது.