இந்தியா
மாட்டிறைச்சி ட்வீட்: பிரபல எழுத்தாளர் ராமச்சந்திர குஹாவுக்கு மிரட்டல்
மாட்டிறைச்சி உண்பது தொடர்பாக பிரபல வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா ட்வீட் செய்தது தொடர்பாக அவருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டது.
மாட்டிறைச்சி உண்பது தொடர்பாக பிரபல வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா ட்வீட் செய்தது தொடர்பாக அவருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவா சுற்றுலா சென்ற அவர், அங்கு பாஜக ஆட்சி நடப்பதால் மாட்டிறைச்சியுடன் மதிய உணவு எடுத்துக்கொண்டதாக முதலில் ட்வீட் செய்தார். பின்னர் அதன் ருசி சரியில்லை என்று கூறி அப்பதிவை ஞாயிற்றுக்கிழமை நீக்கினார்.
இந்நிலையில், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக தொலைபேசி எண் ஒன்றை குறிப்பிட்டு மீண்டும் ட்வீட் செய்தார். ஆனால், அதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கவில்லை. எனவே, இதை தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.