ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 போலீஸார் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
அம்மாநிலத்தின் சோஃபியான் பகுதியில் உள்ள சைன்புரா எனும் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்கிழமை திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் சம்பவ இடத்திலேயே 3 ஜம்மு-காஷ்மீர் போலீஸார் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது போலீஸாரிடம் இருந்த ஆயுதங்களையும் பயங்கரவாதிகள் கொள்ளையடித்துச் சென்றனர்.