மல்லையாவுக்கு எதிரான தீர்ப்பு மோடிக்கு கிடைத்த வெற்றி:  பாஜக தலைவர் அமித் ஷா

விஜய் மல்லையாவை நாடு கடத்த வேண்டும் என்று பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த வெற்றி என்று பாஜக தலைவர் அமித் ஷா
மல்லையாவுக்கு எதிரான தீர்ப்பு மோடிக்கு கிடைத்த வெற்றி:  பாஜக தலைவர் அமித் ஷா


விஜய் மல்லையாவை நாடு கடத்த வேண்டும் என்று பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த வெற்றி என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரையில் அவர் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
மல்லையாவை நாடு கடத்துமாறு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் மிக முக்கியமான வெற்றியாகும். அதன் பெருமை முழுவதும் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். 
இந்திய வங்கிகளில் கடன் வாங்கி, நிதி நெருக்கடிக்குள்ளாக்கிவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பியோடிய மல்லையாவுக்கு எதிராக விசாரணை அமைப்புகள் இடைவிடாது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்தவர் மோடி. 
ஊழல் மற்றும் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து நேர்மையை அவர் நிலைநிறுத்தியிருக்கிறார். நாட்டு மக்கள் அனைவரையும் புதிய இந்தியாவுக்கு வரவேற்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் வரவேற்பு: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் தொடர்புடைய கிறிஸ்டியன் மிஷெலுக்கு அடுத்ததாக தற்போது விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வரப்படுவது உறுதியாகியிருப்பதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டை ஏமாற்றிய எவரும் தப்பிக்க முடியாது என்பது நிரூபணம் ஆகியிருப்பதாகவும், மத்திய அரசு எடுத்த இடைவிடாத முயற்சிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது என்றும் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com