புது தில்லி: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விரிவான அறிக்கை தயாரிக்க தடை விதிக்க மறுத்துவிட்டது.
மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. மத்திய அரசு அளித்த அனுமதிக்கு எதிராக உச்ச நீதிமன்றதில் தமிழகம் வழக்கு தொடர்ந்தது.
இது தொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், இது குறித்து மத்திய அரசு, நீர்வள ஆணையம், கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.