வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னமாக வலுப்பெற்று வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரக்கூடும்.
புயல் கரையை கடக்கும் போது 100 முதுல் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் வடதமிழக கடலோர மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யலாம். எனவே மீன்வர்கள் அடுத்த 4 நாட்களக்கு கடலுக்குச் செல்ல வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.