சத்தீஸ்கர் முதல்வர் தேர்வில் இழுபறி: சோனியா, பிரியங்காவுடன் ராகுல் முக்கிய ஆலோசனை

சத்தீஸ்கர் முதல்வர் தேர்வில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் சூழலில் சோனியா மற்றும் பிரியங்காவுடன் ராகுல் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சத்தீஸ்கர் முதல்வர் தேர்வில் இழுபறி: சோனியா, பிரியங்காவுடன் ராகுல் முக்கிய ஆலோசனை

சத்தீஸ்கர் முதல்வர் தேர்வில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் சூழலில் சோனியா மற்றும் பிரியங்காவுடன் ராகுல் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சத்தீஸ்கரில் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாஜக ஆட்சி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுடன் முடிவுக்கு வந்தது. அங்கு 3-ல் 2 பங்கு இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இருப்பினும் அங்கு முதல்வர் தேர்வில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 

இந்நிலையில், துக்ளக் சாலையில் அமைந்துள்ள தனது இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா மற்றும் அவரது மகள் பிரியங்கா வாத்ரா ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், முதல்வர் வேட்பாளர்களாகக் கருதப்படும் டி.எஸ்.சிங் தியோ, தம்ரத்வாஜ் சாஹு, பூபேஷ் பாகீல் மற்றும் சரண் தாஸ் மஹந்த் ஆகியோரும் அங்கு இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் பி.எல்.புணியா மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com