புது தில்லி: இந்தியாவிலேயே டெங்கு பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா கூறுகையில், கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. டெங்கு பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம்.
தமிழகத்தில் மட்டும் 23,294 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், 65 பேர் டெங்கு பாதித்து உயிரிழந்தனர். அடுத்தபடியாக, மகாராஷ்டிராவில் 41 பேரும், கேரளாவில் 37 பேரும் டெங்கு பாதித்து உயிரிழந்தனர். நாடு முழுவதும் 253 பேர் டெங்கு பாதித்து உயிரிழந்தனர் என்று தெரிவித்தார்.