கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இன்று ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் கொச்சியில் கப்பல் கட்டும் தளத்தில் சாஹர் புஷாகன் என்ற கப்பலை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்ட போது டேங்கர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலியானதாகவும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் மற்றும் போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.