ஊழலால் பலனடைகிறது பாஜக: கேஜரிவால் தாக்கு

"ஊழலால் காங்கிரஸ் பலனடைந்ததைப் போல, தற்போது பாஜகவும் பலனடைந்து வருகிறது' என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினார்.
ஊழலால் பலனடைகிறது பாஜக: கேஜரிவால் தாக்கு

"ஊழலால் காங்கிரஸ் பலனடைந்ததைப் போல, தற்போது பாஜகவும் பலனடைந்து வருகிறது' என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினார்.
இது குறித்து அவர் சுட்டுரையில் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது: பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் 2011-ஆம் ஆண்டு தொடங்கி, தற்போது வரை நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் மீது பாஜகவும், பாஜக மீது காங்கிரஸூம் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. 
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் அனைத்தும் பாஜக ஆட்சியிலும் நடைபெறுகிறது என்பதுதான் உண்மை. ஊழலால் முன்பு காங்கிரஸ் பலனடைந்தது. அதே ஊழலால் தற்போது பாஜகவும் பலனடைந்து வருகிறது. இதனால்தான், எந்தவொரு ஊழல் தொடர்பாகவும் காங்கிரஸ்காரர்களை பாஜக சிறைக்கு அனுப்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com