ஜனநாயகத்தை மறையச் செய்யும் மாயாஜால வித்தைக்காரர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, மிகப் பெரிய மாயாஜால வித்தைக்காரர் என்றும், அவரால் ஜனநாயகத்தைக் கூட மறையச் செய்துவிட முடியும் என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஜனநாயகத்தை மறையச் செய்யும் மாயாஜால வித்தைக்காரர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, மிகப் பெரிய மாயாஜால வித்தைக்காரர் என்றும், அவரால் ஜனநாயகத்தைக் கூட மறையச் செய்துவிட முடியும் என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
60 உறுப்பினர்களைக் கொண்ட மேகாலய சட்டப் பேரவைக்கு வரும் 27-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த மாநிலத்தில் தொடர்ந்து 3 முறை ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஜோவாய் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அவர் பேசியதாவது:
ஒரே சொடுக்கில் எதையும் மறையவும், திரும்பத் தோன்றவும் செய்யும் மிகப் பெரிய மாயாஜால வித்தைகாரர் என்ற பெயரை, பிரதமர் மோடி தொடர்ந்து தக்கவைத்து வருகிறார். விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி போன்ற மோசடியாளர்கள், இந்தியாவில் இருந்து மாயாஜாலமாக மறைந்துவிட்டனர். பின்னர், இந்திய சட்டங்களின் வரம்புக்கு அப்பால் வெளிநாட்டு மண்ணில் மீண்டும் தோன்றிவிட்டனர். மோடியால், ஜனநாயகத்தைக் கூட மறையச் செய்துவிட முடியும்.
மல்லையா, நீரவ் மோடி விவகாரங்களின் மூலம் மத்திய பாஜக அரசால் ஊழலை ஒழிக்க முடியாது என்பதையும், அந்த அரசே ஊழலில் பங்கேற்பதையும் நாம் அறிந்திருக்கிறோம்.
ரூ.22,000 கோடி மோசடி செய்துவிட்டு, நீரவ் மோடி எப்படி நாட்டைவிட்டு தப்பினார் என்ற கேள்விக்கு பிரதமர் மோடியிடம் பதில் இல்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய பாஜக அரசு தோல்விகண்டுவிட்டது. விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஊழலை ஒழிப்பது குறித்து தினம் தினம் பேசி வரும் மோடி, பாஜகவின் பிரசாரத்துக்கு செலவிடப்படும் நிதி எங்கிருந்து வருகிறது என்பது குறித்து எதுவும் பேசுவதில்லை என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com