ரயில்வே முன்பதிவுக்கு ஆதார் கட்டாயமில்லை: ரயில்வே துறை விளக்கம்

ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் திட்டம் இல்லை என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் திட்டம் இல்லை என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
மக்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு, ரயில்வே இணையமைச்சர் ராஜேன் கோஹைன் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் திட்டம் எதுவுமில்லை. எனினும், மூத்த குடிமக்களுக்கான சலுகை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, தாமாக முன்வந்து ஆதார் எண்ணைத் தெரிவிக்கும் நடைமுறை, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும், ரயில் டிக்கெட்டுகளை பயணிகள் முன்பதிவு செய்யும்போது, அவர்கள் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை இணைப்பதை ஊக்குவிக்கும் வகையில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் மாதம் ஒன்றுக்கு முன்பதிவு செய்யும் எண்ணிக்கை, 12-ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com