நாட்டின் 69-வது குடியரசு தினவிழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஆசியான் கூட்டமைப்புத் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணைக் குடியரசுத் துணை தலைவர் வெங்கைய்ய நாயுடு, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற குடியரசு தின சிறப்பு அணிவகுப்பை அனைவரும் கண்டு ரசித்தனர்.
அதுபோல, நாடு முழுவதும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடி ஏற்றினார்.
இந்நிலையில், தினமும் உள்ள சிறப்புகளை கௌரவித்து நினைவுபடுத்தும் விதமாக கூகுள் டூடுல் வெளியிடுவது வாடிக்கை. அவ்வகையில் 69-ஆவது இந்திய குடியரசு தினத்தை கௌரவிக்கும் விதமாக கூகுள் இணையதளம் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.