மணிப்பூரில் நிலச்சரிவு: 9 பேர் பலி

மணிப்பூர் மாநிலத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.

மணிப்பூர் மாநிலத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில், அஸ்ஸாம் மாநிலத்தை ஒட்டியுள்ள தாமங்லாங் நகரில் 3 இடங்களில் புதன்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினரும், உள்ளூர் பொதுமக்களும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 
அவர்கள், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடல்களை மீட்டனர். 2 சிறார்களின் உடல்களை தோண்டியெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக, மாவட்ட இணை ஆணையர் ரவீந்தர் சிங் கூறினார். 
நிலச்சரிவில் சிக்கி காயமடைந்த 7 பேர், மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வர் என்.பிரேன் சிங், மத்திய வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com