காவிரி: 18-இல் கர்நாடக எம்.பி.க்கள் ஆலோசனை

காவிரி விவகாரம் தொடர்பாக தில்லியில் ஜூலை 18-ஆம் தேதி கர்நாடக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

காவிரி விவகாரம் தொடர்பாக தில்லியில் ஜூலை 18-ஆம் தேதி கர்நாடக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரங்கள் குறித்து எதிர்ப்புத் தெரிவித்துள்ள கர்நாடக அரசு, இதுகுறித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பத் திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் அன்றே (ஜூலை 18) கர்நாடக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்தை தில்லியில் நடத்த முதல்வர் குமாரசாமி முடிவு செய்துள்ளார்.
இக் கூட்டத்தில் காவிரி விவகாரம் மட்டுமல்லாது, மத்திய அரசு திட்டங்களுக்கான நிதியைப் பெறுவது குறித்தும் விவாதிக்கப்படவிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com