லக்னௌ: லக்னௌ அடுத்த சார்பாக் பகுதியில் உள்ள 2 ஹோட்டல்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
சார்பாக் பகுதியில் தூத் மாண்டி என்ற இடத்தில் இன்று காலை 6 மணியளவில் இரண்டு ஹோட்டல்களில் அடுத்தடுத்து தீ விபத்து நேரிட்டது.
இந்த விபத்தில் ஹோட்டலில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.