மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: கேரள அரசு

கேரளாவில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்மாநில அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: கேரள அரசு

கேரள மாநிலம் நிபா வைரஸை தொடர்ந்து கனமழையால் மிகவும் பாதிப்படைந்தது. இந்த கனமழையால் ஆங்காங்கே மலைச்சரிவு போன்ற சம்பவங்களால் பல வீடுகள் அடித்தும், பல வீடுகள் சேதமும் அடைந்தன. நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உட்பட 56 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, இந்த மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில அரசு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது. அஃதாவது, இறந்தவர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை அரசு அறிவித்துள்ளது. நிலச்சரிவில் வீடுகள் மற்றும் நிலம் முற்றிலும் சேதமடைந்த குடும்பங்களுக்கு 6 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. வீடுகளை முற்றிலுமாக இழந்தவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. வீடுகள் ஓரளவு சேதமடைந்த குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும்.

இதுமட்டுமின்றி, இந்த பேரழிவை ஆராய்ந்து, வரும் மழைக்காலங்களில் இதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தனி கமிட்டியை அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com