உத்தரகண்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலம் டோட்டம் அருகே ராம்நகர்-அல்மோரா சாலையில் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.