நாட்டிலேயே தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூர், போபால் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தை சண்டிகர் நகரம் பெற்றுள்ளது.
தூய்மையான நகரங்கள் 2018 பட்டியலை மத்திய நகர்ப்புற அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று புதன்கிழமை வெளியிட்டார்.
அதில், இந்தியாவின் தூய்மையான நகரங்களாக இந்தூர் மற்றும் போபால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளன. சண்டிகர் நாட்டின் மூன்றாவது தூய்மையான நகரமாக இடம்பெற்றுள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய நகரங்களில் ஆந்திராவின் விஜயவாடா நகரம் தூய்மையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூய்மையான மாநில தலைநகர் என்ற சிறப்பை மும்பை தட்டிச் சென்றது.
இந்தூர் மாநகராட்சி நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதற்காக பல என்ஜிஓ நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. கழிவுகள் மறுசுழற்சி மூலம் உரங்களாக பிரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளில் நகரில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகளின் அளவு குறைந்தே காணப்பட்டு வருகின்றன. குப்பை சேகரிப்புக்காக பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
"ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு சம்மந்தப்பட்ட இடத்திலேயே அபதாரம் (ஸ்பாட்) என்ற விதியை கடுமையாக்கியதே முக்கிய காரணமாகும்.
3 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் தொகை கொண்டவற்றில் மைசூரு நகரம் தூய்மையானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. குடிமக்கள் கருத்து, நேரடியாக இடத்தை பார்வையிடுதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தூய்மையான நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தூய்மையான நகங்கள் பட்டியலில், 2016-இல் 73 நகரங்கள் இடம்பெற்றன. 2017-இல் 434 நகரங்களும், 2018-ஆம் ஆண்டில் 4,041 நகரங்கள் இடம்பெற்றுள்ளன என்பது பாராட்டத்தக்கது.