கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 5 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முதல் கட்டமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இந்தோனேஷியா சென்றடைந்தார்.
இதையடுத்து, இன்று காலை இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோதோவை சந்தித்து மோடி பேசினார். இந்தியா மற்றும் இந்தோனேஷிய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் நடத்தும் தொழிலதிபர்கள் மாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடியும், ஜோகோவும் இணைந்து பங்கேற்க இருக்கின்றனர்.
அதன் ஒருகட்டமாக, ஜகார்த்தாவில் நடைபெற்ற பட்டம் கண்காட்சியை காண இருவரும் சென்றனர். அந்த கண்காட்சியை கண்ட ஜோகோவும், மோடியும் பிறகு பட்டம் விட்டு மகிழ்ந்தனர்.
இதைத்தொடர்ந்து, அவர்கள் இஸ்திக்லால் மசூதிக்கு சென்றனர்.