பாட்னா: திருமணமாகி ஆறு மாதங்களில் விவாகரத்து கோரி லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ்பிரதாப் யாதவ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும் , பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்தின் மகன் தேஜ்பிரதாப் யாதவுக்கும், பிகார் எம்எல்ஏ சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.
பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமண விழாவில், அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் குடும்ப சகிதமாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திருமணமாகி ஆறு மாதங்களில் விவாகரத்து கோரி லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ்பிரதாப் யாதவ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பான விசாரணை நவம்பர் 29 தேதி பாட்னா குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. விவகாரத்துக்கான காரணம் என்னவென்று வெளியில் தெரியவில்லை.