ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் மற்றும் அவரது குழுவுக்கு முதுகெலும்பு உள்ளது என்று எண்ணுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆர்பிஐ மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான பிரச்னை நிலவி வரும் நிலையில், ஆர்பிஐ வாரியக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுதொடர்பாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
"மோடி மற்றும் அவரது சேவகர்கள் குழு அனைத்து அமைப்புகளையும் அழித்து வருகிறது. இன்று, மோடி தனது கைப்பாவைகள் மூலம், ஆர்பிஐ வாரியக் கூட்டத்தில் ஆர்பிஐயை அழிக்க முயற்சிப்பார். உர்ஜித் படல் மற்றும் அவரது குழுவுக்கு முதுகெலும்பு உள்ளது என்று நினைக்கிறேன். அவர்கள் மோடிக்கான எல்லையை அவருக்கு காண்பிப்பார்கள் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.