புது தில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101வது பிறந்ததினம் இன்று காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு தில்லி ஷக்தி ஸ்தாலில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா, தலைவர் ராகுல் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.