சபரிமலையில் காங்கிரஸ் யாரையும் தாக்கவில்லை: ரமேஷ் சென்னிதாலா விளக்கம்

சபரிமலை விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தான் போராடுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் காங்கிரஸ் யாரையும் தாக்கவில்லை: ரமேஷ் சென்னிதாலா விளக்கம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நிலக்கல்லில் கூடிய ஐயப்ப பக்தர்கள் அங்கு வரும் வாகனங்களை சோதனையிட்டு, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

இதனால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது கேரள போலீஸார் தடியடி நடத்தினர். இதனால், பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் பத்தனம்திட்டா, நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தான் போராடுகிறது. எனவே அங்கு நடைபெற்ற பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்களுக்கு காங்கிரஸ் பொறுப்பல்ல.

இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களில் காங்கிரஸ் ஒருபோதும் ஈடுபடுவது கிடையாது. மேலும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் சம்பவம் கண்டனத்துக்குரியது என கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா விளக்கமளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com