பஞ்சாபில் ரயில் மோதி பெரும் விபத்து: 50 பேர் பலி ? 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ரயில் மோதிய விபத்தில் 50 பேர் பலியாகியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
பஞ்சாபில் ரயில் மோதி பெரும் விபத்து: 50 பேர் பலி ? 

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ரயில் மோதிய விபத்தில் 50 பேர் பலியாகியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

வட மாநிலங்களில் வெள்ளியன்று தசரா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா பண்டிகை கொண்டாட்டத்திற்காக கூடியிருந்த கூட்டத்தின் மீது ரயில் மோதியுள்ளது. 

தண்டவாளம் அருகே கொண்டாட்டத்தின் பொருட்டு சுமார் 100-க்குமேற்பட்டோர் கூடியிருந்தனர். அப்போது நடத்தப்பட்ட வாண வேடிக்கைகளின் ஒலி மற்றும் ஒளியினால் ரயில் வருவதை யாரும் கவனிக்கவில்லை. 

இதனால் கூட்டத்தின் மீது ரயில் புகுந்ததில் 50 பேர் பலியானார்கள். மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை இன்னும் உயர்க் கூடும் என்று அஞ்சப்படுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com