எல்லையில் வீரர்களுக்கு பதில் நவீன தொழில்நுட்பக் கண்காணிப்பு

எல்லையில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பதிலாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, எல்லை கண்காணிப்பு,
எல்லையில் வீரர்களுக்கு பதில் நவீன தொழில்நுட்பக் கண்காணிப்பு


எல்லையில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பதிலாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, எல்லை கண்காணிப்பு, ஊடுருவல் தடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தசரா பண்டிகையையொட்டி, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில் ஆயுதங்களுக்கு பூஜை செய்யப்பட்டது. அதில் ராஜ்நாத் சிங்கும், மற்ற ராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது:
எல்லையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபடுவதை தடுக்க தொழில்நுட்பத்தின் மூலமாக பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு முறையை உருவாக்க மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த முறை தற்போது சோதனை அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எல்லையில் அமைக்கப்படும் தொழில்நுட்ப கருவிகளின் மூலமாக அங்குள்ள சூழல் என்ன என்பதை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அதிகாரிகள் கண்காணிப்பர். எல்லையில் நடமாட்டம் தென்பட்டால் அங்கிருக்கும் கருவிகளின் மூலமாக கட்டுப்பாட்டு மையத்துக்கு எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பப்படும். அதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று ராஜ்நாத் கூறினார்.
நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் எல்லை பாதுகாப்பு படையினர் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அது அண்மை காலத்தில் மேலும் அதிகரித்துள்ளது. நமது வீரர்களை பார்த்து பாகிஸ்தான் வீரர்கள் நடுங்குகின்றனர். 
எல்லையில் இருக்கும் பாதுகாப்பு படை வீரர்களின் கடின உழைப்பை நான் பார்த்திருக்கிறேன். 
தேசப்பற்று தான் அவர்களை ஊக்குவிக்கிறது. இந்த உணர்வுதான் சந்திர சேகர் ஆசாத், பகச் சிங், குதிரம் போஸ் ஆகியோரை சுதந்திரம் கேட்டு போராட வைத்தது என்று கூறினார்.
மேலும், நாம் ஆயுதங்களை வைத்து பூஜிக்கிறோம். நமது அண்டை நாடுகள் ஆயுதங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் நமக்கு ஆயுதங்கள் தேவைப்படாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com