சென்னை: 'நான் ஒரு தலைவன் அல்ல; தனி மனிதன்' என்று கருணாநிதி நினைவுப் பேரணியில் பங்கேற்ற தனது விசுவாசிகளுக்கு நன்றி தெரிவித்து மு.க அழகிரி உணர்ச்சிகர கடிதம் எழுதியுள்ளார்.
மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது மகனான மு.க.அழகிரி பேரணி ஒன்றை 5-ஆம் தேதி சென்னையில் நடத்தினார். அதில் கணிசமான அளவில் அவரது விசுவாசிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில் 'நான் ஒரு தலைவன் அல்ல; தனி மனிதன்' என்று கருணாநிதி நினைவுப் பேரணியில் பங்கேற்ற தனது விசுவாசிகளுக்கு நன்றி தெரிவித்து மு.க அழகிரி உணர்ச்சிகர கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தினை அவர் கலைஞரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே என்று துவங்கியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நான் ஒரு தலைவன் அல்ல, பேச்சுத் திறமை கொண்டவனும் அல்ல. ஒரு தனி மனிதனாக, தொண்டனாக என் வேண்டுகோளை ஏற்று கருணாநிதி மறைந்த 30-வது நாளில் அஞ்சலி செலுத்த அலைகடலென திரண்டு வந்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.