மும்பை: மொகரம் பண்டிகைக்கு விடுமுறை விடுவதில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில் நாளை நாடு முழுவதும் மொகரம் பண்டிகை கடைபிடிக்கப்படப்பட உள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிராவில் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், முஸ்லிம் ஊழியர்கள் நாளை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என்று தனியார் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
மகாராஷ்டிராவில் உள்ள வங்கி மற்றும் கல்லூரிகள் இன்று விடுமுறை காரணமாக மூடப்பட்டுள்ளன. ஆனால் நாட்டின் பிற பகுதிகளில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.