ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
துஜ்ஜர் என்ற பகுதியில் நௌபோரா கிராமத்தில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
சோபோர் மாவட்டத்தில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. துப்பாக்கிச் சண்டை காரணமாக சோபோர் மாவட்டத்தில் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. செல்போன சேவை முடக்கப்பட்டுள்ளது.