ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.
உதம்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜம்மு-காஷ்மீரின் கடைசி இளவரசர் கரண் சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் போட்டியிட்டார்.
இவரை விட சுமார் 3.57 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று, ஜிதேந்திர சிங் வெற்றி பெற்றார். ஜம்மு-காஷ்மீர் தேர்தல் வரலாற்றில், இவ்வளவு அதிக வாக்கு வித்தியாசத்தில் இதுவரை யாரும் வெற்றி பெற்றதில்லை. ஜிதேந்திர சிங், புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்று அந்த மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, தனது வெற்றிக்காக உழைத்த பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.