புதுதில்லி
தேசிய கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இந்திய கடற்படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில், கடற்படை வீரர்களின் தியாகத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 ம் தேதி கொண்டாடப்படுகிறது.
அனைத்து கடற்படை அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கடற்படை தின வாழ்த்துக்கள். நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துள்ள கடற்படை வீரர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்து. அவர்களின் வீரத்திற்கு தலைவ ணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.