தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டதாகவும், தற்போது பிசியோதெரபி சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் இன்று சென்னையில் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் முதல்வர் குணமடைந்து விட்டதாக அப்பல்லோ நிர்வாக தலைவர் பிராதாப் சி ரெட்டி சில நாட்களிக்கு முன்பு பேட்டியளித்தார்.
இந்தநிலையில் முதல்வரின் உடல்நிலை குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன், முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்றுவிட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று தொடர்பான நோய்கள் குணம் அடைந்து விட்டனர். தற்போது முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கபடுகிறது.
பணிக்கு திரும்புவதற்காக முதல்வர் ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் அரசு தொடர்பான உத்தரவுகளை முதல்வர் வழங்கிவருகிறார். முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்றுள்ளதை தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர் என்று கூறினார்.