தில்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தில்லியில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் ரயில் மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பகல் நேரங்களில் கூட சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் செல்கின்றனர். கடும் பனிமூட்டம் நிலவியதால் இந்திரா காந்தி விமான நிலையத்தில் 6 சர்வதேச விமானங்கள் மற்றும் 7 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக வரவுள்ளது. மேலும் 1 உள்நாட்டு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் 16 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டதாகவும், 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வடக்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 94 ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.