டெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கினால் 0.75 % தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார். மேலும் டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தி புறநகர் ரயில் டிக்கெட் எடுத்தால் 0.5 சதவீதம் சலுகை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மின்னணு முறையில் ரயில் டிக்கெட் எடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என்றும் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார்.
மேலும் நெடுஞ்சாலைகளில் கார்டு மூலம் சுங்க கட்டணம் செலுத்தினால் 10 சதவீதமும், பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆன்லைனில் பணம் செலுத்தினால் சேவை கட்டணம் இல்லை என்றும் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.