பழைய ரூபாய் நோட்டு பிரச்னையை தீர்க்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சரத் யாதவ், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி நவ. 8ஆம் தேதி இரவு பழைய ரூ.500, ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தார்.
மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.