இலங்கை சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 15  பேருக்கும் சிறைக்காவல் மீண்டும் நீடிப்பு.  

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும்  ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 15 மீனவர்களுக்கு

ராமேசுவரம்,

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும்  ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 15 மீனவர்களுக்கு டிசம்பர் 23 ஆம் தேதி வரை சிறைக்காவலை மீண்டும் நீட்டித்து அந்நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவுயிட்டது. 

ராமேசுவரம் பகுதியிலிருந்து அக்டோபர் 31 ஆம் தேதி கார்த்திக்கேயன் என்பவர்க்கு சொந்தமான படகில்  மீனபிடிக்க சென்ற ராமர், முனியசாமி, ராஜேந்திரன், முனியசாமி ஆகிய நான்கு மீனவர்களையும், அதுபோல நவம்பர் 19 ஆம் தேதி  ராமேசுவரம் பகுதியிலிருந்து சேகர்,கிளவச்சாமி என்பவர்க்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்ற ஸ்டாலின், குமார்,விசு, முருகன், கருமலையான்,  வீரணன், ராஜாகோபால், ஜோதிமுத்துராமலிங்கம், முத்துக்குமார், முத்துநாதன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 11 மீனவர்களையும் சேர்த்து 15 மீனவர்களையும் கச்சத்தீவு அருகே வைத்து அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர்  கைது செய்தனர்.

பின்னர் விசாரணை நடத்தி  காங்கேசன்துறை போலீஸôரிடம்  ஒப்படைத்தனர்.அங்கு  போலீஸôர் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக வழக்கு பதிந்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அங்கு மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி சிறைக்காவலில் வைக்க உத்தரவுயிட்டார்.

அதன் பேரில்  15 மீனவர்களையும் போலீஸôர் யாழ்பாணம் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அக்டோபர் 31 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் நான்கு மீனவர்களை கடைசியாக நவம்பர் 28 ஆம் தேதியும்,அதுபோல நவம்பர் 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் 11 மீனவர்களை டிசம்பர் 2 ஆம் தேதி நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர் படுத்தினர். இவர்களுக்கு மீண்டும் டிசம்பர் 9 ஆம் தேதி வரை

சிறைகாவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவுயிட்டார்.இதனால்15 மீனவர்களையும் போலீஸôர் மீண்டும் சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் 20  நாள்களுக்கு மேலாக சிறையிலிருந்து வந்த 15 மீனவர்களை போலீஸார் நீதிமன்றம் உத்தரவின்பேரில்  வெள்ளிக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அங்கு மீனவர்களிடம்   நீதிபதி சபேசன் விசாரணை நடத்தினார்.

அதன் பிறகு  இவ்வழக்கு  குறித்து இலங்கை கடற்படையினர் நீதிமன்றத்தில் போதுமான ஆவணங்களை  ஒப்படைக்கவில்லை என்பதை நீதிபதி சுட்டிகாட்டி மீனவர்களின் சிறைக்காவலை டிசம்பர் 23 தேதி வரை மீண்டும் நீட்டித்து உத்தரவுயிட்டார். அதன் பேரில் மீனவர்கள் 15 பேரையும் போலீஸார் மீண்டும் யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com