குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவர் கைது

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவரை போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவரை போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள தென்னமநல்லூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(45). இவரது மனைவி கருப்பாயி(40). 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் ஆறுமுகத்துக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவாராம். இதை கருப்பாயி கண்டித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு மதுபோதையில் வந்த ஆறுமுகத்தை, கருப்பாயி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் அரிவாளால் வெட்டியும், கட்டையால் கழுத்தை அழுத்தியும் கருப்பாயியை கொலை செய்துள்ளார். 

இதுதொடர்பாக அவரது மகள் பாண்டியம்மாள் அளித்தப் புகாரின்பேரில் வில்லூர் போலீஸர் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com