கரிவலம்வந்தநல்லூர் அருகே மின்னல் தாக்கி பசுமாடு சாவு

கரிவலம்வந்தநல்லூர் அருகே காரிச்சாத்தான் பகுதியில் பலத்த மழைபெய்தபோது,மின்னல் தாக்கி பசுமாடு இறந்தது.

சங்கரன்கோவில்,

கரிவலம்வந்தநல்லூர் அருகே காரிச்சாத்தான் பகுதியில் பலத்த மழைபெய்தபோது,மின்னல் தாக்கி பசுமாடு இறந்தது.

கரிவலம்வந்தநல்லூர் அருகே காரிச்சாத்தானில் பலத்த மழை பெய்தது.இடிமின்னலுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் காரிச்சாத்தான் பள்ளிக்கூடத்தெருவைச் சேர்ந்த முத்து என்பவர் தனது மாட்டுத் தொழுவத்தில் மாடுகளை கட்டிப் போட்டிருந்தார்.

அப்போது திடீரென்று இடிமின்னல் தாக்கியது.இதில் அவரது மாட்டுத் தொழுவத்தில் கட்டிப் போட்டிருந்த பசுமாடு ஒன்று இறந்தது.இச்சம்பவம் தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.                                                                               
        

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com