பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி

திருவள்ளூர் மாவட்டத்தில் பணியின்போது உயிர் நீத்த காவலர்களின் நினைவு தினத்தையொட்டி மாவட்ட காவல்

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில் பணியின்போது உயிர் நீத்த காவலர்களின் நினைவு தினத்தையொட்டி மாவட்ட காவல்  எஸ்பி அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, எஸ்பி சாம்சன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

 தமிழகத்தில் நடப்பாண்டில் பணியின் போது உயிரிழந்த 471 காவலர்களுக்கான அஞ்சலி செல்லுத்தும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 

திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சாம்சன் தலைமையில், வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதை தொடர்ந்து எஸ்பி சாம்சன், கூடுதல் எஸ்பி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள்  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com