ஜப்பான் பூங்காவில் இரட்டை குண்டு வெடிப்பு: ஒருவர் பலி - 3 பேர் படுகாயம்

ஜப்பானில் பூங்கா ஒன்றில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் ஒருவர் பலியாகியுள்ளார், 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஜப்பான் பூங்காவில் இரட்டை குண்டு வெடிப்பு: ஒருவர் பலி - 3 பேர் படுகாயம்

ஜப்பானில் பூங்கா ஒன்றில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் ஒருவர் பலியாகியுள்ளார், 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது உட்சுனோமியா நகர். மக்கள் தொகை அதிகம் உள்ள அந்த நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இன்று திருவிழா நடந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் காலை 11.30 மணி அளவில் பூங்காவில் இரண்டு குண்டுகள் வெடித்தன. பூங்காவில் சைக்கிள்களை நிறுத்தும் இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார். அவரது உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு குண்டு வெடிப்பில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். குண்டு வெடிப்புக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com