தமிழக கூடுதல் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவை தமிழகத்துக்கான ஆளுநராக நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும், மகாரஷ்டிர மாநிலத்துக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியை ஆளுநராக நியமிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேசமயத்தில் தெலங்கானா ஆளுநராக இருக்கும் நரசிம்மன் தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களையும் சேர்த்து கவனித்து வருகிறார்.
இந்த இரு மாநிலங்களுக்கும் தனித்தனி ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள். நரசிம்மன் தெலுங்கானா ஆளுநராகவும், கேரள ஆளுநராக இருக்கும் சதா சிவத்தை ஆந்திர ஆளுநராக நியமிக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது.
கேரளாவுக்கு புதிய ஆளுநராக குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென்பட்டேலை நியமிக்கலாமா? என்று மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.