உளுந்தூர்பேட்டை,
கோவையிலிருந்து தனியார் வங்கி உட்பட 7 வங்கிகளிலிருந்து பல கோடி ரூபாய் பணம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
கோவை தனியார் வங்கி உட்பட 7 வங்கிகளிலிருந்து பல கோடி ரூபாய் பணம் 3 கண்டெய்னர் லாரிகளில் துணை ஆணையர் முருகசாமி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது. செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் மதிய உணவினை சாப்பிட்டனர்.பின்னர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.